Pages

Friday, August 7, 2026

பாவலர் சகோதரர்களின் Folk music of Tamil nadu

 


இசைஞானி இளையராஜா நாட்டுப்புறப் பாடல்களை மையப்படுத்தி ஒரு நாவலை உருவாக்குமாறு எழுத்தாளர் சுஜாதாவை வேண்டவும், அவரும் 

“கரையெல்லாம் செண்பகப்பூ” எழுதியதாகக் குறிப்பிட்டிருப்பார்.

பின்னாளில் மெல்லத் திறந்தது கதவு படத்திலும் மோகன் கதாபாத்திரம் நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிக்கும் ஆய்வாளராக உருவாக்கப்பட்டிருக்கும்.


இதற்கெல்லாம் ரிஷிமூலம் ஒன்றுண்டு.


மேற்கில் மழை பெய்யவே ஏ ரங்கநாதசாமியோ

மேல் வாய்க்கால் தண்ணீர் வர


Youtube இல்


https://youtu.be/C12qX1XYBxs?si=7ji2BpU6DhDYIrdi


Spotify


https://open.spotify.com/track/3KBA5kwm2qjse85kPn7ide?si=-byLG1xVThqOnUHBdbG4Eg&utm_source=copy-link


இந்தத் தாலாட்டுப் பாடல் 


Folk music of Tamil nadu என்ற

இளையராஜாவின் திரைப் பிரவேசத்துக்கு முன்பாக 

பாவலர் சகோதரர்கள் கொடுத்த இசைப் பெட்டகம்.


சியாமளா பாலகிருஷ்ணன் அவர்கள் சேகரித்த தமிழக நாட்டுப்புறப் பாடல்களுக்கு பாவலர் சகோதரர்கள் இசையில் பத்மா சுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.


பின்னாளில் இந்தப் பாடலின் பல்லவியை அப்படியே கையாண்டு

பேராசிரியர் ஜெகன்னாதன் வரிகளில் “சிறை கதவுகள்” படத்தில் V.ஜெயசேகர் இசையில் இப்படி வந்திருக்கிறது கேளுங்கள்


https://youtu.be/6DaABIcBK0U?si=GcWRgt_C0qWjkd48


அதுவும் மெட்டுக் கூட ஒத்திசைக்கிறது


இரண்டாவது 

தண்ணி கருத்திருச்சு தவளைச் சத்தம் கேட்டிருச்சு

இப்படி அந்த நாட்டுப் பண் பாடலில் வரும் வரிகளை அப்படியே

“இளமை ஊஞ்சலாடுகிறது” படத்தில் வாலியின் வரிகளோடு இணைத்து வந்திருக்கிறது கேளுங்கள்


இன்னொன்று

இந்த நாட்டுப் பண் முடியும் போது வரும் வரிகள்

மருத அழகரோ மாமதுர சொக்கரோ


இதை சுந்தர புருஷன் படத்தில் சிற்பி இசையில் வைரமுத்துவின் பாடலின் பல்லவியாக எழுதப்பட்டிருக்கும்

இப்படி


https://youtu.be/2RMtg963ovk?si=nv2f2XcW4TpR8ijS


இந்த கிராமியப் பண் பாடல்களின் தாக்கத்தால் மேலும் சில பாடல்கள் வந்திருக்கின்றன. அவற்றைப் பின்னர் பார்ப்போம் 😊


கானா பிரபா

07.08.2026