பாதமலர் நோகுமுன்னு
நடக்கும் பாதைவழி
பூவிரிச்சேன் மயிலே
ஓடம் போல் ஆடுதே மனசு
கூடித் தான் போனதே வயசு…
“ஏரிக்கரைப் பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ !
https://youtu.be/LihOo9mQWFc?si=mAWVpqLRf27GN4L1
புலவர் சிதம்பரநாதன் எழுதிய அந்தப் பாடல் வரிகள், தூறல் நின்னு போச்சு படத்துக்காக இடம்பெற்றது.
படத்தின் ஆரம்பக் காட்சி ஒன்றில் பாக்யராஜ் & சுலக்சனா சந்திக்கும் காட்சி வரும். அதில் திருட்டுத்தனமாகச் சந்தித்து வெட்கப் புன்னகையோடு ஓடும் சுலக்சனாவின் காலில் முள்ளுக் குத்தும். அடுத்த நாள் அந்தப் பாதையில் பூக்களால் மெத்தை போட்டிருப்பார் பாக்யராஜ். அந்த நேரத்தில் வரும் பாட்டு “பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்”. பாடலை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம்.
அதன் பின் காட்சி மாறி கோலம் மாறியதும் சோகப் பாடலாக உருவெடுக்கும் “ஏரிக்கரைப் பூங்காத்தே” பாடலில் அந்த முள் குத்தலை புலவர் சிதம்பரநாதன் வரிகளில் வாங்கியிருப்பார் பாக்யராஜ், அதுதான் பாக்யராஜ்.
இப்படியாக எந்தப் பாடலாசிரியர் என்றாலும் அவர்களிடம் வாங்கும் திறன் கொண்டவர் அவர்.
கே.பாக்யராஜ் படங்களில் மிக அரிதாகவே முழுப்பாடல்களையும் ஒருவரே எழுதுவார். அப்படியான வாய்ப்பு கவிஞர் வாலிக்கு அதிகம் வாய்த்திருக்கிறது. ஒருமுறை வாலியே வேடிக்கையாக பொது மேடை ஒன்றில்
“இந்த பாக்யராஜிடம் எவ்வளவோ தடவை சொல்லிட்டேன் அனுபவமில்லாத பாடலாசியர்களுக்குப் பாடல் கொடுக்காதீங்கன்னு ஏன்னா அதைச் செம்மைப்படுத்த என்னிடம் வருவார்” என்று சொல்லி இருப்பார்.
பாக்யராஜுக்கு இம்மாதிரி அணி செய்த பாடலாசிரியர் வரிசையில் புலவர் சிதம்பரநாதனை மேலும் இரு படங்களில் பயன்படுத்தியிருக்கிறார்.
இரண்டுக்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.
ஒன்று “ஒரு கை ஓசை” படத்தில் எஸ்.ஜானகி குரலில் இடம்பெற்ற
“நான் நீரோடையில் நீராடையில்”
https://youtu.be/yuRdd33Jxxo?si=0y1K7PZffV6kRotc
“பாமா ருக்மணி” படத்தில் இரண்டு பாடல்கள். அதில் ஒன்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் உதவியாளர் ஜோசப் கிருஷ்ணாவுடன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ஆங்கிலம் கலந்த ரகளையான பாட்டு
Take somebody love me anybody
https://youtu.be/PrdPUXhiCOs?si=nZLAzRCDvaSYIUyk
நீ ஒரு கோடி மலர் கூடி
உருவானவள்
எழில் உருவானவாள்
https://youtu.be/_8s8OYJyB1Y?si=pykphtwGTaCoO1QG
இந்தப் பாடலை இலங்கை வானொலியின் பொற்கால ரசிகர்கள் மறந்து விட முடியுமா என்ன?
உவமைகள் எல்லாம்
உயர்ந்தவை அல்ல..
உன் எழில் முன்னாலே…
நீ ஒரு கோடி மலர் தூவி உருவானவள்
புலவர் சிதம்பரநாதன் எழுதிய இந்தப் பாடல் காட்சி வடிவம் பெற்ற போது இன்னொரு சிறப்புமுண்டு.
கே.பாக்யராஜின் முதல் மனைவி பிரவீணாவோடு அவர் ஜோடி சேர்ந்து பாடும் பாட்டு இது.
இங்கேயும் “மலர்” வந்திருக்கிறது.
பாக்யராஜ் இன் பாடலாசிரியர்கள் குறித்து இன்னும் பேசுவோம். ❤️
கானா பிரபா
29.06.2026

